மெல்ல மீண்டெழுகிறேன். காலத்தின் பிடியிலிருந்து ...........

Wednesday, 16 November 2016

பசங்க மேல தப்பில்லை.....!




ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்டாராம்...

மாநில அளவில் அதிக மதிப்பெண்களை மாணவிகளே அதிகமாகப் பெறுகிறார்களே, என்ன காரணம்?”

ஒரு மாணவன் அலட்டிக்கொள்ளாமல் எழுந்து சொன்னானாம்….

“இதுக்கெல்லாம் வேறு ஒரு காரணமும் இல்லைங்க சார்..

மதிப்”பெண்கள்” என்பதை கொஞ்ச நாளைக்கு மாற்றி,
மதிப்”ஆண்கள்” என்று அழையுங்கள்… சரியாகிவிடும்!”

இன்னொரு மாணவன் இடையில் புகுந்து சொன்னானாம்….

“அப்படியே கல்விக்கடவுள் சரஸ்வதியை வேறு துறைக்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டு,

ஆம்பிளைக் கடவுளாப் பாத்து அப்பாயின்மென்ட் பண்ணுங்க!”

இப்போ காரணம் புரியுதுங்களா
பசங்க மேல தப்பில்லை.....!

No comments:

Post a Comment